Friday, April 28, 2006

என் முதல் வணக்கம்

எச்சல் இலையை நக்கியபடி தாங்களும் ஜனநாயகம் கதைக்கின்றோம் என்று புலம்பித்திரியும் கூட்டத்தை அடையாளப்படுத்த வேண்டிய தேவை உள்ளது.
எனவே இப்படிப்பட்ட ஜனநாயகவாதிகளின் ஜனநாயகம் எப்படிப்பட்டது என்பதையும், இவர்கள் சிங்கள அரசுடன் எப்படி நெருக்கமாக இருந்தபடி சிங்கள அரசு செய்யும் தமிழர் கொலைகளை நியாயப்படுத்த வேண்டிய தேவை எமக்குண்டு.

சிலர் தமிழ்மணத்தில் ஈழப் போராட்டம் தொடர்பாக தப்பாக எழுதுவதன் மூலம் அதை சிறுமைப்படுத்தப் பார்க்கின்றனர். இவர்களைப் போன்றவர்களுக்கு விடுதலைப் போராட்டம் என்பது வெறுமனே அறிக்கைகளாலும், குளிரூட்டப்பட்ட அறையில் விவாதிப்பதுமல்ல என்பதைப் புரிய வைப்பது தான் எம் எண்ணங்கள்.

படித்தவர்கள் தான் சாதிப்பார்கள் என்று சொல்லி, சிங்களப் பேரினவாதம் தந்த எச்சல் எலும்பிற்காய் இனத்தையையே விலை பேசிய கூட்டத்தை ஒதுக்கி, தமிழர்கள் யார் என்று தனித்தே அடையாளம் காட்டிய தலைவன் வழியால் இவர்கள் விழி பிதுங்கி நிற்கின்றது

"தன் மகனுக்கு "அட்மிசனுக்காக" இவர் என் வாசலில் தவம் இருந்தவர் என்று டட்லி சேனாநயக்கா சொன்னபோது வாய் மூடி மௌனமாக இருந்த இந்தப் படித்தவர்கள் செய்த அநியாயம் கொஞ்ச நஞ்சமல்ல. இன்று வரைக்கும் தமிழனுக்கு விடிவு வராமைக்கு இவர்கள் சிங்கள இனவாதிகளுடன் சேர்ந்து செய்யும் துரோகத்துக்கும் பங்குண்டு.

தங்களை ஜனநாயக வாதிகளாகவும், நியாயவாதிகளாகவும் காட்டிக் கொண்டு ஈழத்தில் சிங்கள இராணுவம் செய்யும் கொலைகள், பாலியல் வல்லுறவுகளை மூடி மறைப்பதும், அவற்றை புலிகள் மீது பழி போடுவதும் தான் இவர்கள் வேலை

ஒரு ரஜனி திரணகமவின் மரணத்துக்காக புலம்பும் இவர்கள் ஏன் இத்தனை அட்டூழியங்களையும் ஏன் கண்டு கொள்ளவில்லை. அது சேவகத் தொழில் செய்யும் மாயை!!

ஜனநாயகம் என்று பெயர் போட்டால் மட்டும் போதாது, சனநாயகம் எப்படிப்பட்டது என்பதை தெளிவாக புரிய வைப்போம்!!


தாயகத்தில் உள்ள எதிரிகளையும், துரோகிகளையும் தலைவன் பார்த்துக் கொள்வான். புலத்தில் உள்ள துரோகிகளை நாம் பார்த்துக் கொள்ளப் போகின்றோம்.

இப் பதிவுக்கு வரும் உறவுகட்கு நன்றிகள்

4 Comments:

Anonymous Anonymous said...

உன்னால் ரயாகரன்மீதான பொய்யை நிலைநாட்ட முடியவில்லை.பின் பதிவை அழித்துவிட்டுப் புதுப்பதிவுட்டுள்ளாய்.நீயெல்லாமொரு ...

11:23 AM  
Blogger சனநாயகம் said...

ஜயோ குஞ்சு!!
ராயகரன் குறித்த விளக்க கட்டுரையை விரைவில் போடப் போறம். அப்ப பாருங்கோ மாப்பிளை!! முதல் வணக்கத்திலேயே துரோகிகளைப் பற்றி ஏன் அலட்டுவான் என்று தான் அகற்றி விட்டேன்.

இதற்கெல்லாம் வருந்தாதையுங்கோ!! நான் என்ன இவ்வளவு கட்டுரையோடே நிற்கவா போறன். நிறைய இருக்குது!! :-)

8:43 PM  
Blogger விண்ணாணம் said...

சனநாயகம், இப்படித் தொடங்கிய ஓரிருவர் என்ன காரணங்களுக்காகவோ நாலைந்து பதிவுகளுடன் நிறுத்தி விட்டார்கள். நீங்களாவது தொடர்ந்து பதிவுகளைத் தருவதற்கு வாழ்த்துகள்.

3:28 AM  
Blogger விண்ணாணம் said...

மறுமொழி மட்டுறுத்தலைச் செய்யுங்கள்.

4:47 AM  

Post a Comment

<< Home