ஒரு லட்சம் தமிழர் சவப்பெட்டிகள்!!
சமீபத்தில் ஹல உறுமயவின் செயலாளர் சம்பிக்க ரணவக்க, பத்திரிகை ஒன்றிக்கு கொடுத்த பேட்டி தான் இந்தப் பயங்கரச் செய்தி. வெகு சாராணமாய் ஒரு பேட்டி ஒன்றில் தமிழ்மக்களைக் கொல்வோம் என்று அவர் சொன்னபோது சிங்கள அரசியல்வாதிகள் எவரிடம் இருந்தும் மறுப்பு அறிக்கை கூட வரவில்லை. அல்லது எவ்வித மிதவாதப் போக்குள்ளவர்களிடம் இருந்து கூட கண்டணம் ஏதும் வரவில்லை. சொல்லப்போனால் ஒட்டு மொத்த சிங்கள தேசமும் அதை விரும்புவதற்கான அடையாளமே இது.
சிறிலங்கா தேசமும், தமிழர் தேசமும் ஆங்கிலேயரால் அடிமைப்பட்டு இருந்த காரணத்தால், இருவரும் ஒன்று சேர்ந்து ஆக்கிரமிப்பாளரை எதிர்த்தார்கள். அந்த ஒரு பாவத்துக்காக சிங்கள தேசம் ஆங்கிலேய வெளியேற்றத்தின் பின் தனது மேலாண்மையை தமிழர் மத்தியில் திணிக்கப் பார்க்கின்றது. சுதந்திரப் போராட்ட காலத்தில் கூட முஸ்லீம்களுடன் எந்த மதம் உயர்ந்தது என்று விவாதித்து புளங்கிதம் அடைந்திருந்தது சிங்கள தேசம். விடுதலைப்புலிகளின் தலைவர் சொன்னபடி அது ஒரு "மகாவம்ச கிறுக்குத்தனம்".
அதன் பின் கொண்டுவரப்பட்ட சிங்கள மொழி ஆட்சிப் பிரகடனம்,முதுகில் குத்தப்பட்ட "சிறீ"( சிங்கள மொழி ஆட்சிமொழியாவதை தமிழர் எதிர்ததால் கையில் அகப்பட்ட தமிழ் மக்களுக்கு முதுகில் சிறீ என்ற சிங்களச் சொல்லை, கம்பியைச் சூடாக்கி பதித்து வைத்தது. சொல்லப் போனால் மாட்டுக்கு குறி சூடுதல் போன்ற வேதனை) தமிழ் மாணவர்களை முடக்கும் வெட்டுப் புள்ளி அறிவிப்பு, தமிழர் விரட்டப்பட்டு, அத்துமீறிய குடியேற்றங்கள், என்று சிங்கள மேலாண்மையை எதிர்த்து தான் தமிழ் மக்கள் போராட்டத்தில் குதிக்க வேண்டி வந்தது.
இதை விலை போனவர்கள் மறந்ததாகக் காட்டிக் கொள்ளலாம். ஆனால் இதை ஞாபகப்படுத்துவதற்கு தான் சம்பக்க ரணவக்கவின் அறிவிப்பு சொல்கின்றது. ஹல உறுமய இன்று மகிந்த ராஜபக்சவின் அரசாங்கத்தில் முக்கிய பங்காளியாக இருக்கின்றது. ஹல உறுமையவின் உறுப்பினரான முன்னாள் இனவாதப் பொலிஸ் உத்தியோகஸ்தர் கொட்டகதெனிய எல்லோரையும் மிஞ்சிய இனவாதி. ஒரு காலத்தில் தமிழ் மக்களை கொழும்பை விடடே துரத்த வேண்டும் என்று மேடைகளில் முழக்கம் போட்டவர். இப்போது மகிந்தவின் அரசாங்கத்தில் பாதுகாப்பு ஆலோசகராக இருக்கின்றார்.
எனவே ஹல உறுமைய சொன்னது போன்ற, ஒரு லட்சம் தமிழ்மக்களைக் கொல்வோம் என்ற சொன்னது அதனால் சாத்தியப்படாத ஒன்றல்ல. இராணுவப் போராட்டத்தில் அப்பாவி தமிழ்மக்களைக் காவு கொள்ள ஏன் நினைக்கவேண்டும். அது வெறுமமே தூக்கி எறிந்து விட முடியாது. அது சிங்கள அடிமனதில் உள்ள உணர்வுகள். இலங்கை சிங்களவனுக்குத் தான் சொந்தம். தமிழர் எல்லாம் சிங்களம் என்ற மரத்தில் வளரும் படர்கொடிகள் என்று யுத்த தேவதை "சந்திரிக்க அம்மையார்" ஆபிரிக்க மாநாடு ஒன்றில் கேலப்படுத்தி இருந்தார்.
ஒரு லட்சம் தமிழர் சவப்பெட்டிகளை உருவாக்குவதற்கு சிங்கள தேசம் ஆரம்பித்து விட்டது என்பதை சமீபத்திய தமிழர் படு கொலைகள் முரசறிவிக்கின்றன. நேற்று முன்தினம் கூட நெல்லியடி எனும் இடத்தில் நண்பனின் பிறந்தநாள் நிகழ்விற்கு இரு ஆட்டோ வாகனங்களில் சென்ற 7 இளைய செல்வங்களை இராணுவம் நடுவீதியில் வைத்து சுட்டுக் கொன்றிருக்கின்றது. அதற்கு அது சொன்ன காரணம், கைக்குண்டு (கிரனைட்) ஒன்றை எறிந்தார்களாம். ஒரு கைக்குண்டை எறிய ஏழு பேர் தேவையா என்ற கேள்விக்கு பதில் இல்லை. இதை விட ஆட்டோவிலிருந்தபடி அது வீசுவதில் வசதியாக இருக்காது என்பதைச் சிங்கள இராணுவம் ரெம்ப அறியும்.
ஆக, தமிழ்மக்களை கொல்வதில் நியாயங்களைத் தேடுவதில் தான் இராணுவம் முழு மூச்சாக செயற்பட்டு வருகின்றது.
*திருகோணமலையில் ஜந்து பள்ளி மாணவர்களை படுக்க வைத்த, கிட்லர் பாணியில் தலையில் சுட்டுக் கொன்றது,
*புத்தூரில் 5 இளைஞர்களைச் சுட்டுக் கொன்றது.
*விமானத்தாக்குதலில் 17 தமிழ்மக்கள் அநியாயமாக கொல்லப்பட்டது, *திருகோணமலையில் சிங்களக் காhடையர்களால் 16 தமிழ்மக்கள் கொல்லப்பட்டது.
என்று பெருமளவினான தமிழ்மக்கள் ஒட்டுமொத்தமாக கொல்லப்படுவது தான் தகவலாக வருகின்றதே தவிர, தினமும் வௌ;வேறு இடங்களில் ஒவ்வொருவராக சுட்டுக் கொல்லப்படும் தமிழ்மக்களைப் பற்றி செய்தித் தாள்களும் கண்டு கொள்வதில்லை.
மகிந்த ஆட்சி வந்த பிற்பாடு சுமார் 600 வரையிலான தமிழ்மக்கள் கொல்லப்பட்டு இருக்கின்றார்கள். கொன்று விட்டு இராணுவம், புலிகளால் கொல்லப்பட்டனர் என்று ஒரு பழியைப் போடும். இல்லாவிடின், புலிகள் தான் கொல்லப்பட்டதாக அறிக்கை விடும். உண்மையில் சிங்கள பேரினவாத்துக்கு இது பற்றி எவ்வித வருத்தமும் இல்லை. கொல்லப்படும் மக்கள் தமிழ்மக்கள் தானே! அதன் ஒரு லட்சம் கனவுகள் ஈடேறிக்கொண்டிருப்பதைத் தான் நிகழ்காலம் காட்டுகின்றது.
எனவே தமிழனும் மாற்று வழிகளைத் தேடவேண்டி ஏற்படுகின்றது. தேசியத் தலைவர் சொன்னவாறு "தமிழன் சாவதற்காக வாழவில்லை. வாழ்வதற்கே சாகின்றான்" என்ற கூற்றை ஆதாரப்படுத்த வேண்டி ஏற்பட்டுள்ளது. இது தமிழன் மீது திணிக்கப்பட்ட கொடுமை. அதை அகற்றினால் தான் சுந்திரக் காற்றை சுவாசிக்க மடியும். இல்லாவிடின் அந்த திண்ப்பை சுமந்தபடி வாழ வேண்டும். அதற்கு தன்மானமுள்ளவன் இடம் அளிக்கப் போவதில்லை
சிறிலங்கா தேசமும், தமிழர் தேசமும் ஆங்கிலேயரால் அடிமைப்பட்டு இருந்த காரணத்தால், இருவரும் ஒன்று சேர்ந்து ஆக்கிரமிப்பாளரை எதிர்த்தார்கள். அந்த ஒரு பாவத்துக்காக சிங்கள தேசம் ஆங்கிலேய வெளியேற்றத்தின் பின் தனது மேலாண்மையை தமிழர் மத்தியில் திணிக்கப் பார்க்கின்றது. சுதந்திரப் போராட்ட காலத்தில் கூட முஸ்லீம்களுடன் எந்த மதம் உயர்ந்தது என்று விவாதித்து புளங்கிதம் அடைந்திருந்தது சிங்கள தேசம். விடுதலைப்புலிகளின் தலைவர் சொன்னபடி அது ஒரு "மகாவம்ச கிறுக்குத்தனம்".
அதன் பின் கொண்டுவரப்பட்ட சிங்கள மொழி ஆட்சிப் பிரகடனம்,முதுகில் குத்தப்பட்ட "சிறீ"( சிங்கள மொழி ஆட்சிமொழியாவதை தமிழர் எதிர்ததால் கையில் அகப்பட்ட தமிழ் மக்களுக்கு முதுகில் சிறீ என்ற சிங்களச் சொல்லை, கம்பியைச் சூடாக்கி பதித்து வைத்தது. சொல்லப் போனால் மாட்டுக்கு குறி சூடுதல் போன்ற வேதனை) தமிழ் மாணவர்களை முடக்கும் வெட்டுப் புள்ளி அறிவிப்பு, தமிழர் விரட்டப்பட்டு, அத்துமீறிய குடியேற்றங்கள், என்று சிங்கள மேலாண்மையை எதிர்த்து தான் தமிழ் மக்கள் போராட்டத்தில் குதிக்க வேண்டி வந்தது.
இதை விலை போனவர்கள் மறந்ததாகக் காட்டிக் கொள்ளலாம். ஆனால் இதை ஞாபகப்படுத்துவதற்கு தான் சம்பக்க ரணவக்கவின் அறிவிப்பு சொல்கின்றது. ஹல உறுமய இன்று மகிந்த ராஜபக்சவின் அரசாங்கத்தில் முக்கிய பங்காளியாக இருக்கின்றது. ஹல உறுமையவின் உறுப்பினரான முன்னாள் இனவாதப் பொலிஸ் உத்தியோகஸ்தர் கொட்டகதெனிய எல்லோரையும் மிஞ்சிய இனவாதி. ஒரு காலத்தில் தமிழ் மக்களை கொழும்பை விடடே துரத்த வேண்டும் என்று மேடைகளில் முழக்கம் போட்டவர். இப்போது மகிந்தவின் அரசாங்கத்தில் பாதுகாப்பு ஆலோசகராக இருக்கின்றார்.
எனவே ஹல உறுமைய சொன்னது போன்ற, ஒரு லட்சம் தமிழ்மக்களைக் கொல்வோம் என்ற சொன்னது அதனால் சாத்தியப்படாத ஒன்றல்ல. இராணுவப் போராட்டத்தில் அப்பாவி தமிழ்மக்களைக் காவு கொள்ள ஏன் நினைக்கவேண்டும். அது வெறுமமே தூக்கி எறிந்து விட முடியாது. அது சிங்கள அடிமனதில் உள்ள உணர்வுகள். இலங்கை சிங்களவனுக்குத் தான் சொந்தம். தமிழர் எல்லாம் சிங்களம் என்ற மரத்தில் வளரும் படர்கொடிகள் என்று யுத்த தேவதை "சந்திரிக்க அம்மையார்" ஆபிரிக்க மாநாடு ஒன்றில் கேலப்படுத்தி இருந்தார்.
ஒரு லட்சம் தமிழர் சவப்பெட்டிகளை உருவாக்குவதற்கு சிங்கள தேசம் ஆரம்பித்து விட்டது என்பதை சமீபத்திய தமிழர் படு கொலைகள் முரசறிவிக்கின்றன. நேற்று முன்தினம் கூட நெல்லியடி எனும் இடத்தில் நண்பனின் பிறந்தநாள் நிகழ்விற்கு இரு ஆட்டோ வாகனங்களில் சென்ற 7 இளைய செல்வங்களை இராணுவம் நடுவீதியில் வைத்து சுட்டுக் கொன்றிருக்கின்றது. அதற்கு அது சொன்ன காரணம், கைக்குண்டு (கிரனைட்) ஒன்றை எறிந்தார்களாம். ஒரு கைக்குண்டை எறிய ஏழு பேர் தேவையா என்ற கேள்விக்கு பதில் இல்லை. இதை விட ஆட்டோவிலிருந்தபடி அது வீசுவதில் வசதியாக இருக்காது என்பதைச் சிங்கள இராணுவம் ரெம்ப அறியும்.
ஆக, தமிழ்மக்களை கொல்வதில் நியாயங்களைத் தேடுவதில் தான் இராணுவம் முழு மூச்சாக செயற்பட்டு வருகின்றது.
*திருகோணமலையில் ஜந்து பள்ளி மாணவர்களை படுக்க வைத்த, கிட்லர் பாணியில் தலையில் சுட்டுக் கொன்றது,
*புத்தூரில் 5 இளைஞர்களைச் சுட்டுக் கொன்றது.
*விமானத்தாக்குதலில் 17 தமிழ்மக்கள் அநியாயமாக கொல்லப்பட்டது, *திருகோணமலையில் சிங்களக் காhடையர்களால் 16 தமிழ்மக்கள் கொல்லப்பட்டது.
என்று பெருமளவினான தமிழ்மக்கள் ஒட்டுமொத்தமாக கொல்லப்படுவது தான் தகவலாக வருகின்றதே தவிர, தினமும் வௌ;வேறு இடங்களில் ஒவ்வொருவராக சுட்டுக் கொல்லப்படும் தமிழ்மக்களைப் பற்றி செய்தித் தாள்களும் கண்டு கொள்வதில்லை.
மகிந்த ஆட்சி வந்த பிற்பாடு சுமார் 600 வரையிலான தமிழ்மக்கள் கொல்லப்பட்டு இருக்கின்றார்கள். கொன்று விட்டு இராணுவம், புலிகளால் கொல்லப்பட்டனர் என்று ஒரு பழியைப் போடும். இல்லாவிடின், புலிகள் தான் கொல்லப்பட்டதாக அறிக்கை விடும். உண்மையில் சிங்கள பேரினவாத்துக்கு இது பற்றி எவ்வித வருத்தமும் இல்லை. கொல்லப்படும் மக்கள் தமிழ்மக்கள் தானே! அதன் ஒரு லட்சம் கனவுகள் ஈடேறிக்கொண்டிருப்பதைத் தான் நிகழ்காலம் காட்டுகின்றது.
எனவே தமிழனும் மாற்று வழிகளைத் தேடவேண்டி ஏற்படுகின்றது. தேசியத் தலைவர் சொன்னவாறு "தமிழன் சாவதற்காக வாழவில்லை. வாழ்வதற்கே சாகின்றான்" என்ற கூற்றை ஆதாரப்படுத்த வேண்டி ஏற்பட்டுள்ளது. இது தமிழன் மீது திணிக்கப்பட்ட கொடுமை. அதை அகற்றினால் தான் சுந்திரக் காற்றை சுவாசிக்க மடியும். இல்லாவிடின் அந்த திண்ப்பை சுமந்தபடி வாழ வேண்டும். அதற்கு தன்மானமுள்ளவன் இடம் அளிக்கப் போவதில்லை

0 Comments:
Post a Comment
<< Home