Sunday, May 07, 2006

தமிழர் அழிப்பிற்கு துரோகி தயாரித்தல்

பெற்றவள் நினைவில் இல்லை!
அவள் அரவணைத்து உச்சி -
முகர்ந்த நாட்கள் மனதில் இல்லை.

மனதில் அன்பு கொண்டு
மடியில் தூங்க வைத்த
தந்தையும் நினைவில் இல்லை.

தாய் கண்டிக்கையில்-என்
தம்பி இவன் என்று உச்சிமோர்ந்த
அக்காளும் நினைவில் இல்லை!

சிற்றுண்டி செய்தாலும், சிறு பையில்
போட்டெனக்கு மறைவில் தந்து வைத்த
மாமியும் நினைவில் இல்லை!

கனவு, நினைவெல்லம் கயவன் காசு!
சொந்தம், பந்தம் எல்லாம் விலையில் போச்சு!
தமிழன் சிந்திய இரத்தக்கறைகள் கண்டு கொண்டன!
நீ தான் இனத் துரோகி!

படர்கொடி கூட்டம் என பண்பின்றி
சுட்டெரிக்கும் வார்த்தைகளால் சிங்களப் பேரினவாதம்-மனதை
வைதிடும் வேளை, "வள்ளல் நீ! வார்த்தைகளால் புகழ்கின்றாய்" என,
சொல்லும் தகுதி கொண்டீர்!!!

பச்சிலம் பாலகரை, பாதையில் மறித்தங்கே,
துஸ்டர் சிங்களவர், துப்பாக்கியால் துவாரம் போடுகையில்,
எச்சில் வழிந்தோட, எலும்பை நக்கியபடி,
எலிகள் தான் செத்தது என எழுத்தில் விட்டுவீர்!!

பள்ளி மாணவியவள் பாடசாலை செல்கையில்
வல்லையில் காத்திருக்கும் வல்லூறுப் பிசாசுகள்,
கலவி செய்து கற்பைச் சூறையாட,
எல்லா நாட்டிலும் இது நடப்பது தான் என
இரப்பை நிரப்பிடுவீர்!!

தலையாட்டி வேடம் அணிந்து நீர்,
தலையைச் சிலுப்பி திரும்பினாலே,
அப்பாவியை அடித்துக் கொல்லும் காடையர் கூட்டம்!
பலம் என்று நினைக்காதே!
நாளை உன் தேவை முடிய உனக்கும் சிங்களவனின் கல்லறை!

ஒன்றை நினைவில் கொள்வீர்!
கன்றை இழந்த தாய் போல் கதறும் தமிழ்தாயின்
சாபம் உம்மைச் சும்மா விட்டிடுமா!
நாங்கள் துரோகியில்லை என நா கதற கத்தினாலும்,
செய்த பாவங்கள் சிறப்பாக விட்டுமா!!
பேய்களுடன் சேர்ந்து செய் கொட்டங்கள்!
விரைவில் மறந்திடுமா!!

இராவணன் காலம் முதல் விபுூசணன் போல்
பல துரோகிகள் கண்டது தமிழ் உலகம்!
துரோகிகளால் தான் அழிவு கண்டோம்!
கற்றது நல்ல பாடம்!-எனி
கவனம் கொள்வோம் எச்சில் நாய்களை எண்ணி!

Saturday, May 06, 2006

கருணா குழுவின் வரலாறு முடிவு!!!

பொலநறுவை மாவட்டம் வெலிக்கந்தை பிரதேசத்தின் காசம் குளம் என்னுமிடத்தில் முகாமிட்டிருந்த கருணா குழு முகாம்கள் விடுதலைப் புலிகளினால் தாக்கியழிக்கப்பட்ட செய்தி மூலம் விடுதலைப் புலிகள் பல கேள்விகளுக்குப் பதிலளித்துள்ளனர்.

01) எங்கும் எப்போதும் சென்று தாக்கும் திறன். விடுதலைப் புலிகளுக்கு உண்டு.

02) போர் நிறுத்த உடன்பாட்டின்படி அரசு செய்யாத ஒட்டுக் குழுக்களின் ஆயுதக் களைவை விடுதலைப் புலிகள் செய்தமை.

03) தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தின் வாகனம் கண்டு பிடிக்கப்பட்டுள்ளன. இவ்வாகனங்கள் மூலம் கருணா குழுதான். தமிழர் புனர்வாழ்வுக் கழகப் பணியாளர்களை கடத்தியது என்பது உறுதியாக்கப்பட்டுள்ளது.

04) கருணா குழுவிடமிருந்து கைப்பற்றப்பட்ட ஆயுதங்கள் படையினரால் வழங்கப்பட்டமை என்பது நிருபிக்கப்பட்டுள்ளது.

05) படையினர் கட்டுப்பாட்டுப் பகுதியில் தான் கருணாகுழு இயங்கி வருவதற்கான ஆதாரங்கள். 06) கருணா குழு முகாம் மீது விடுதலைப் புலிகளின் சிறப்புப்படையணி தாக்குதல் நடத்திய போது படையினர் கருணா குழுவுக்கு உதவியதிலிருந்து கருணா குழுவினருக்கு இராணுவம் உதவுவது போன்ற பல்வேறு உண்மைகள் வெளிச்சத்துக்கு வந்துள்ளன.

போர்நிறுத்த உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்ட காலத்திலிருந்து போர் நிறுத்த உடன்படிக்கையை சீர்குலைக்கும் வகையில் கருணா குழு உட்பட இதர ஆயுதக் குழுக்களை கையகப்படுத்தி வைத்திருந்த சிறிலங்கா அரசு தமிழ் மக்கள் மீதும், தமிழீழ விடுதலைப் புலிகள் மீதும் தாக்குதல்களை மேற்கொண்டனர். அதிலும் குறிப்பாக கருணா குழுவை விடுதலைப்புலிகளுக்கு நிகரான ஒரு அமைப்பாக தென்னிலங்கை பேரினவாத ஊடகங்கள் புகழ்ந்து தள்ளின் படைத் தரப்பினரும் கருணா கும்பலின் உதவியுடன் கிழக்கில் விடுதலைப் புலிகளின் செயற்பாடுகளை முடக்கலாம் என்ற கற்பனாவாதத்தில் மிதந்தனர்.


எனினும், பொலநறுவை காசம்குளம் பகுதியில் கருணா கும்பலின் முகாம் மீதான தாக்குதலின் மூலம் 'எங்கும் செல்வோம் எதிலும் வெல்வோம்' என்பதை போராளிகள் மீளவும் நிலைநிறுத்திக் காட்டியுள்ளனர். சிறிலங்கா இராணுவ ஆக்கிரமிப்பு பிரதேசமான பொலநறுவை மாவட்டத்தின் எல்லைப் புறமான ஓர் இடமே காசங்குளம். இது வெலிக்கந்தையிலிருந்து கிழக்கே 4 கிலோமீற்றர் தொலைவில் உள்ளது. பொலநறுவை வெலிக்கந்தைக்கு வடக்கே ஐந்து கிலோ மீற்றருக்கு அப்பாலுள்ள திபுலானை என்ற இடத்திற்கும். காண்டக்காடு என்ற இராணுவ முகாமிற்கும் இடையிலுள்ள பிரதேசத்தில் கருணா குழுவின் முகாம் இருந்;துள்ளது. இவர்களே தமிழர் புனர்வாழ்வுக் கழக பணியாளர்கள் உட்பட பல்வேறு கடத்தல் கொலை, கொள்ளை சம்பவங்களிலும் ஈடுபட்டு வந்தனர்.

சம்பவ தினமான சனிக்கிழமை நள்ளிரவு ஊடுருவிய விடுதலைப் புலிகளின் சிறப்புப் படையணி அதிரடித் தாக்குதலை மேற்கொண்டனர். இத்தாக்குதலின் போது கருணா குழுவைச் சேர்ந்த 31 பேர் பலியானதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. பத்துப் பேர் படுகாயம் அடைந்துள்ளனர். இவர்களைப் படையினர் பொலநறுவை வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர். ஐவரை விடுதலைப் புலிகள் உயிருடன் கைது செய்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இதேவேளை விடுதலைப் புலிகளால் கருணா குழுவிடமிருந்து பெருமளவிலான ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

பி.கே.எல்.எம்.ஜி - 02,
ஆர்.பி.ஜி- 01,
81 மில்லிமீற்றர் மோட்டார்- 01,
ஏ.கே.எல். எம்.ஜி.கள் - 06,
தன்னியக்க றைபிள்- 16,
கைத்துப்பாக்கிகள் - 02,
தகவல் தொடர்பு சாதனம் என்பன மீட்கப்பட்டுள்ளன.

முகாம் தாக்கியழிக்கப்பட்ட போது தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தினரிடமிருந்து கடத்தப்பட்ட இருவாகனங்களும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இத்தாக்குதல் சம்பவத்தின் போது கருணா குழுவுக்கு உதவி செய்யும் வகையில் படையினர் எறிகணைத் தாக்குதலை மேற்கொண்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது. தாக்குதலை வெற்றிகரமாக முடித்து விடுதலைப் புலிகளின் சிறப்புப் படையணி முகாம் திரும்பிய பின்னர் படுகாயமடைந்த கருணா கும்பலை படையினர் மீட்டு வைத்தியசாலையில் சேர்த்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இத்தாக்குதல் சம்பவம் தொடர்பாக மட்டக்களப்பு மாவட்ட அரசியல் துறைப் பொறுப்பாளர் தயாமோகன் கருத்து தெரிவிக்கையில்:- ஜெனீவா பேச்சுவார்த்தையின்போது போர் நிறுத்த உடன்படிக்கையில் பிரகாரம் ஒட்டுக் குழுக்களின் ஆயுதங்கள் களையப்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. ஆனால், ஒட்டுக்குழுக்களின் ஆயுதங்களை அரசு களையவில்லை. இத்தகைய சூழலில் தான் நாம் மட்டுப்படுத்தப்பட்ட நடவடிக்கையை மேற்கொண்டோம். எதிர்காலத்திலும் ஒட்டுக் குழுக்களின் ஆயுதங்கள் களையப்படாது தொடர்ந்து அரசு இயங்கி வந்தால் நாம் மட்டுப்படுத்தப்பட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டிவரும் என தயாமோகன் குறிப்பிட்;டிருந்தார்.

இதேவேளை கருணாகுழு முகாம் தாக்கி அழிக்கப்பட்டபோது கருணா குழுவின் முக்கிய நபர்களான சின்னத்தம்பி - மார்க்கன், றியசீலன் உள்ளிட்ட பலர் இருந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேற்படி முகாமிலிருந்த கருணா கும்பலையே திருமலை, வாகரை மற்றும், வாழைச்சேனை பகுதிகளில் பல்வேறு தேசவிரோத நடவடிக்கைகளுக்கு படையினர் பயன்படுத்தி வந்தனர் என்பதுவும் குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் எந்த ஒரு ஒட்டுக்குழுவும் விடுதலைப் புலிகளின் இராணுவ ஆற்றலுக்கும், வலிமைக்கும் முகம் கொடுத்து தாக்குப்பிடிக்க முடியாது என்பதுடன் எங்கு சென்றாவது தமிழ்த் தேசியத்துக்கு துரோகமிழைக்கும் சக்திகளை அழிக்கும் ஆற்றல் விடுதலைப் புலிகளுக்கு உண்டு என்பதை மீளவும் நிருபித்துள்ளனர்.

அடுத்ததாக போர் நிறுத்த உடன்படிக்கைக்கு அமைவாக ஒட்டுக்குழுக்களின் ஆயுதங்களை களையுமாறு விடுதலைப் புலிகள் வலியுறுத்தியபோது விடுதலைப் புலிகளுக்கு கருணா கும்பல் ஒரு சவாலான சக்தி என கற்பனைவாதத்தி;ல் மிதந்த பேரினவாத சக்திகளுக்கு அதனை காசங்குளம் தாக்குதல் மூலம் யார் சவாலான சக்தி என்பதை வெளிப்படுத்தி விட்டனர். அடுத்ததாக வெலிக்கந்தைப் பகுதியில் வைத்து தமிழர் புனர்வாழ்வுக் கழக பணியாளர்கள் கடத்தப்பட்டமை தொடர்பாக சிறிலங்கா அரசு ஆக்கபூர்வமான எந்த நடவடிக்கையையும் மேற்கொள்ளவில்லை. கொலையாளிகளை, கடத்தல்காரர்களை முகாமுக்குள்ளும் முகாம்களுக்கு அருகிலும் வைத்துக் கொண்டு பொலிசார் கண் துடைப்பிற்கு வெலிக்கந்தைப் பிரதேசத்திலுள்ள சில வீடுகளில் மாத்திரம் தேடுதல் நடத்தப்பட்டது.


ஆனால் காசங்குளம் கருணா முகாம் தாக்குதல் மூலம் தமிழர் புனர்வாழ்வுக் கழகத்துக்குச் சொந்தமான வாகனம் மீட்கப்பட்டதிலிருந்து தமிழர் புனர் வாழ்வுக்கழகப் பணியாளர்களை கருணா குழுதான் கடத்தியுள்ளனர் என்ற விடயத்தை விடுதலைப் புலிகள் ஆதாரபூர்வமாக நிரூபித்துள்ளனர். எனவே, சர்வதேச சமூகம் இவ்விடயத்தில் கவனம் செலுத்துவதுடன் கடத்தப்பட்ட தமிழர் புனர் வாழ்வுக் கழகப் பணியாளர்கள் ஏழு பேரின் நிலை தொடர்பாக சிறிலங்கா அரசாங்கமே பதிலளிக்க வேண்டும். இதேவேளை கருணா குழுவிடமிருந்து கைப்பற்றப்பட்ட ஆயுதங்கள் மூலம் படையினருடன் இந்த ஒட்டுக் குழுக்கள் இயங்கி வருவது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. தொடர்ச்சியாக சிறிலங்கா படைத்தரப்பும் சிறிலங்கா அரசும் இராணுவத்துடன் ஒட்டுக் குழுக்கள் இயங்கவில்லை என திரும்பத் திரும்பத் தெரிவித்தாலும். விடுதலைப் புலிகளால் கைப்பற்றப்பட்ட ஆயுதங்கள் சிறிலங்காப் படையினரால் வழங்கப்பட்டமைக்கு சான்று பொருளாக அமைந்துள்ளது.


அடுத்ததாக இந்தத் தாக்குதல் சம்பவம் படையினர் கட்டுப்பாட்டுப் பகுதியில் தான் இடம்பெற்றுள்ளது. ஆனால் படையினர் இது வரை தாக்குதல் தங்களது கட்டுப்பாட்டுப்பகுதியில் நடைபெற்றுள்ளதை ஒத்துக் கொள்ளவில்லை. அதேவேளை தங்களது கட்டுப்பாட்டுப் பகுதியில் தாக்குதல் நடைபெறவில்லை என்று கூறும் படையினர் எவ்வாறு சடலங்களை மீட்டு காயப்பட்டவர்களை வைத்தியசாலையில் சேர்க்க முடிந்தது என்ற கேள்வி எழுகின்றது. எனவே, ஒட்டுமொத்தமாக நோக்குமிடத்து சிறிலங்கா அரசும், சிறிலங்கா படையினரும் கருணா குழுவுக்கு ஆயுதங்கள் வழங்கி அரச கட்டுப்பாட்டுப் பகுதியில் இயங்கியமை நன்கு தெளிவாக உணர்த்தப்பட்டுள்ளது.

அடுத்ததாக போர்நிறுத்த உடன்படிக்கையின் பிரகாரம் ஒட்டுக் குழுக்களின் ஆயுதங்கள் களையப்பட வேண்டும் என விடுதலைப் புலிகள் ஜெனீவா பேச்சிலும் அதன் பின்னரும் கூட வலியுறுத்திய போதும் எந்தவொரு ஒட்டுப்படையும் தங்களது கட்டுப்பாட்டுப் பகுதியில் இல்லை என்று கூறிவந்த அரசு மாறாக ஒட்டுக் குழுக்களின் வன்முறைகள் அதிகரித்துச் சென்றன. குறிப்பாக ஜெனீவாப் பேச்சுக்கு பின்னிருந்து ஏப்ரல் 27ம் வரை 103 தமிழர்கள் படுகொலை இடம் பெற்றதாக விடுதலைப்புலிகளின் அறிக்கையில் அண்மையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அதன் பின்னரும் கூட தமிழினப் படுகொலைகள் அரங்கேறி வருகின்றன. இந்த நிலையில் தான் விடுதலைப் புலிகள் கருணா குழுவின் ஆயுதக் களைவு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். இந்தச் சம்பவத்தையடுத்து சிங்களப் புலனாய்வுத்துறை பேரதிர்ச்சியடைந்துள்ளது. ஒட்டுக்குழுக்களை வைத்து தமிழ் தேசியத்துக்கு எதிரான தேசவிரோத நடவடிக்கைகளை விரிவுபடுத்த திட்டமிட்டிருந்த சிங்களப் புலனாய்வுத்துறை இப்போ கருணா குழுவின் முதுகு எலும்பு உடைக்கப்பட்ட கதையாக போய்விட்;ட நிலையில் எஞ்சிய கருணா குழுவினருக்கு எப்படி பாதுகாப்பு அளிக்கப் போகின்றார்கள் என்ற கேள்வி எழுகின்றது. இனி கருணா கும்பலிக் செயற்பாடுகள் முடக்கப்பபடும் சூழல் உருவாகியிருக்கிறது. ஏனெனில், கருணா கும்பலின் முழுத்தொகையில் அரைவாசிப் பேர் வெலிக்கந்தை தாக்குதலில் பலியானதைத் தொடர்ந்து இந்த நிலை ஏற்பட்டுள்ளது.

எதிர்வரும் காலங்களில் எஞ்சிய கருணா கும்பலை வைத்து மீளவும் அரச படைகள் நிழல் யுத்தத்தைத் தீவிரப்படுத்த நினைத்தால் அவர்களது ஆயுதங்களை களையும் நடவடிக்கைக்கு விடுதலைப் புலிகள் தள்ளப்படலாம். இவை மாத்திரமின்றி இந்த கருணா குழு முகாம்கள் தாக்கியழிக்கப்பட்டதன் மூலம் ஒரு தெளிவான செய்தியும் உலகத்திற்கு உணர்த்தப்பட்டுள்ளது. அதாவது ஈழவிடுதலை வரலாற்றில் விடுதலைப்புலிகளுக்கு எதிராக எந்த ஒரு மாற்று ஆயுத அமைப்பும் உருவாக முடியாது. தமிழ் தேசியத்துக்கு துரோகமிழைக்கும் வகையில் உருவான சக்திகள் அடக்கி ஒடுக்கப்பட்ட வரலாறே ஈழவிடுதலைப் போராட்டத்தில் நடந்துள்ளது. அந்த அடிப்படையில் கருணா குழுவின் செயற்பாடுகள் சிலவேளைகளில் நெருக்கடிகளை விடுதலைப்புலிகளுக்கு ஏற்படுத்தியிருந்தாலும் அதனால் எத்தகைய பின்னடைவோ அல்;லது பலவீன நிலைக்கோ தள்ளப்படவில்லை. எனவே, கருணா குழுவின் வரலாறு முடிவுக்குவரும் காலம் வெகு தொலைவிலில்லை என்பது மட்டுமே உண்மை.

மட்டக்களப்பு ஈழநாதம்

Friday, May 05, 2006

ஒரு லட்சம் தமிழர் சவப்பெட்டிகள்!!

சமீபத்தில் ஹல உறுமயவின் செயலாளர் சம்பிக்க ரணவக்க, பத்திரிகை ஒன்றிக்கு கொடுத்த பேட்டி தான் இந்தப் பயங்கரச் செய்தி. வெகு சாராணமாய் ஒரு பேட்டி ஒன்றில் தமிழ்மக்களைக் கொல்வோம் என்று அவர் சொன்னபோது சிங்கள அரசியல்வாதிகள் எவரிடம் இருந்தும் மறுப்பு அறிக்கை கூட வரவில்லை. அல்லது எவ்வித மிதவாதப் போக்குள்ளவர்களிடம் இருந்து கூட கண்டணம் ஏதும் வரவில்லை. சொல்லப்போனால் ஒட்டு மொத்த சிங்கள தேசமும் அதை விரும்புவதற்கான அடையாளமே இது.

சிறிலங்கா தேசமும், தமிழர் தேசமும் ஆங்கிலேயரால் அடிமைப்பட்டு இருந்த காரணத்தால், இருவரும் ஒன்று சேர்ந்து ஆக்கிரமிப்பாளரை எதிர்த்தார்கள். அந்த ஒரு பாவத்துக்காக சிங்கள தேசம் ஆங்கிலேய வெளியேற்றத்தின் பின் தனது மேலாண்மையை தமிழர் மத்தியில் திணிக்கப் பார்க்கின்றது. சுதந்திரப் போராட்ட காலத்தில் கூட முஸ்லீம்களுடன் எந்த மதம் உயர்ந்தது என்று விவாதித்து புளங்கிதம் அடைந்திருந்தது சிங்கள தேசம். விடுதலைப்புலிகளின் தலைவர் சொன்னபடி அது ஒரு "மகாவம்ச கிறுக்குத்தனம்".

அதன் பின் கொண்டுவரப்பட்ட சிங்கள மொழி ஆட்சிப் பிரகடனம்,முதுகில் குத்தப்பட்ட "சிறீ"( சிங்கள மொழி ஆட்சிமொழியாவதை தமிழர் எதிர்ததால் கையில் அகப்பட்ட தமிழ் மக்களுக்கு முதுகில் சிறீ என்ற சிங்களச் சொல்லை, கம்பியைச் சூடாக்கி பதித்து வைத்தது. சொல்லப் போனால் மாட்டுக்கு குறி சூடுதல் போன்ற வேதனை) தமிழ் மாணவர்களை முடக்கும் வெட்டுப் புள்ளி அறிவிப்பு, தமிழர் விரட்டப்பட்டு, அத்துமீறிய குடியேற்றங்கள், என்று சிங்கள மேலாண்மையை எதிர்த்து தான் தமிழ் மக்கள் போராட்டத்தில் குதிக்க வேண்டி வந்தது.

இதை விலை போனவர்கள் மறந்ததாகக் காட்டிக் கொள்ளலாம். ஆனால் இதை ஞாபகப்படுத்துவதற்கு தான் சம்பக்க ரணவக்கவின் அறிவிப்பு சொல்கின்றது. ஹல உறுமய இன்று மகிந்த ராஜபக்சவின் அரசாங்கத்தில் முக்கிய பங்காளியாக இருக்கின்றது. ஹல உறுமையவின் உறுப்பினரான முன்னாள் இனவாதப் பொலிஸ் உத்தியோகஸ்தர் கொட்டகதெனிய எல்லோரையும் மிஞ்சிய இனவாதி. ஒரு காலத்தில் தமிழ் மக்களை கொழும்பை விடடே துரத்த வேண்டும் என்று மேடைகளில் முழக்கம் போட்டவர். இப்போது மகிந்தவின் அரசாங்கத்தில் பாதுகாப்பு ஆலோசகராக இருக்கின்றார்.

எனவே ஹல உறுமைய சொன்னது போன்ற, ஒரு லட்சம் தமிழ்மக்களைக் கொல்வோம் என்ற சொன்னது அதனால் சாத்தியப்படாத ஒன்றல்ல. இராணுவப் போராட்டத்தில் அப்பாவி தமிழ்மக்களைக் காவு கொள்ள ஏன் நினைக்கவேண்டும். அது வெறுமமே தூக்கி எறிந்து விட முடியாது. அது சிங்கள அடிமனதில் உள்ள உணர்வுகள். இலங்கை சிங்களவனுக்குத் தான் சொந்தம். தமிழர் எல்லாம் சிங்களம் என்ற மரத்தில் வளரும் படர்கொடிகள் என்று யுத்த தேவதை "சந்திரிக்க அம்மையார்" ஆபிரிக்க மாநாடு ஒன்றில் கேலப்படுத்தி இருந்தார்.

ஒரு லட்சம் தமிழர் சவப்பெட்டிகளை உருவாக்குவதற்கு சிங்கள தேசம் ஆரம்பித்து விட்டது என்பதை சமீபத்திய தமிழர் படு கொலைகள் முரசறிவிக்கின்றன. நேற்று முன்தினம் கூட நெல்லியடி எனும் இடத்தில் நண்பனின் பிறந்தநாள் நிகழ்விற்கு இரு ஆட்டோ வாகனங்களில் சென்ற 7 இளைய செல்வங்களை இராணுவம் நடுவீதியில் வைத்து சுட்டுக் கொன்றிருக்கின்றது. அதற்கு அது சொன்ன காரணம், கைக்குண்டு (கிரனைட்) ஒன்றை எறிந்தார்களாம். ஒரு கைக்குண்டை எறிய ஏழு பேர் தேவையா என்ற கேள்விக்கு பதில் இல்லை. இதை விட ஆட்டோவிலிருந்தபடி அது வீசுவதில் வசதியாக இருக்காது என்பதைச் சிங்கள இராணுவம் ரெம்ப அறியும்.

ஆக, தமிழ்மக்களை கொல்வதில் நியாயங்களைத் தேடுவதில் தான் இராணுவம் முழு மூச்சாக செயற்பட்டு வருகின்றது.

*திருகோணமலையில் ஜந்து பள்ளி மாணவர்களை படுக்க வைத்த, கிட்லர் பாணியில் தலையில் சுட்டுக் கொன்றது,
*புத்தூரில் 5 இளைஞர்களைச் சுட்டுக் கொன்றது.
*விமானத்தாக்குதலில் 17 தமிழ்மக்கள் அநியாயமாக கொல்லப்பட்டது, *திருகோணமலையில் சிங்களக் காhடையர்களால் 16 தமிழ்மக்கள் கொல்லப்பட்டது.
என்று பெருமளவினான தமிழ்மக்கள் ஒட்டுமொத்தமாக கொல்லப்படுவது தான் தகவலாக வருகின்றதே தவிர, தினமும் வௌ;வேறு இடங்களில் ஒவ்வொருவராக சுட்டுக் கொல்லப்படும் தமிழ்மக்களைப் பற்றி செய்தித் தாள்களும் கண்டு கொள்வதில்லை.

மகிந்த ஆட்சி வந்த பிற்பாடு சுமார் 600 வரையிலான தமிழ்மக்கள் கொல்லப்பட்டு இருக்கின்றார்கள். கொன்று விட்டு இராணுவம், புலிகளால் கொல்லப்பட்டனர் என்று ஒரு பழியைப் போடும். இல்லாவிடின், புலிகள் தான் கொல்லப்பட்டதாக அறிக்கை விடும். உண்மையில் சிங்கள பேரினவாத்துக்கு இது பற்றி எவ்வித வருத்தமும் இல்லை. கொல்லப்படும் மக்கள் தமிழ்மக்கள் தானே! அதன் ஒரு லட்சம் கனவுகள் ஈடேறிக்கொண்டிருப்பதைத் தான் நிகழ்காலம் காட்டுகின்றது.

எனவே தமிழனும் மாற்று வழிகளைத் தேடவேண்டி ஏற்படுகின்றது. தேசியத் தலைவர் சொன்னவாறு "தமிழன் சாவதற்காக வாழவில்லை. வாழ்வதற்கே சாகின்றான்" என்ற கூற்றை ஆதாரப்படுத்த வேண்டி ஏற்பட்டுள்ளது. இது தமிழன் மீது திணிக்கப்பட்ட கொடுமை. அதை அகற்றினால் தான் சுந்திரக் காற்றை சுவாசிக்க மடியும். இல்லாவிடின் அந்த திண்ப்பை சுமந்தபடி வாழ வேண்டும். அதற்கு தன்மானமுள்ளவன் இடம் அளிக்கப் போவதில்லை

Sunday, April 30, 2006

திரு:பாலகுமாரனிடம் இருந்து..

தமிழீழ விடுதலைப் புலிகளின் உத்தியோகபூர்வ வானொலியான புலிகளின் குரலின் அரசியல் அரங்கம் நிகழ்வில் நேற்று முன்நாள் சனிக்கிழமை (29.04.06) அவர் ஆற்றிய உரையின் எழுத்து வடிவம்:

ஈழநாதத்தின் தலைப்புச் செய்தியாக சிறிலங்கா இராணுவம்- ஒட்டுக்குழுக்களின் அராஜகம்- ஜெனீவா பேச்சின் பின் 103 அப்பாவித் தமிழர்கள் படுகொலை என்று இடம்பெற்றுள்ளது.

சிங்களம் எப்போதும் எங்களோடு பேசும் மொழி. "இராணுவப் படுகொலை மொழி" என்பது மீண்டும் நிரூபிக்கப்பட்டுள்ளது.

இந்த நிரூபணத்தின் ஊடே மூன்று விடயங்களை முன்வைக்கிறோம்.
முதலாவது மகிந்தரின் உத்தி என்ன என்பது தெளிவாகத் தெரிகிறது. போருக்கு முன்னைய சிறிய போரை அல்லது நிழல் போரை நடத்த தயாராகிவிட்டார். அவர் சொன்னதுபோல, "மட்டுப்படுத்தப்பட்ட இராணுவ நடவடிக்கையை அவர் இடைநிறுத்தியிருக்கிறார்" என்கிற அளவில் அவரது போர் உத்தி நிறைவேற்றப்பட்டுள்ளது. ஆகவே போரை நடத்துவதற்கு முன்னர் இன்னொரு சிறிய போரை நடத்த அவர் ஆயத்தமாகிவிட்டார் என்பது தெளிவாகிறது.


இரண்டாவது வழமைபோல் இந்தப் படுகொலைகளைப் பார்த்து உலகம் மெளனம் காத்தது எங்களை மனம் நோக வைத்தது.
சர்வதேசத்தையே கண்டனம் செய்து விடுதலைப் புலிகள் வெளியிட்டிருந்த அறிக்கையை மிக முக்கியத்துவம் கொடுத்து சர்வதேச ஊடகங்கள் யாவும் வெளியிட்டன என்பதையும் கருத்தில் கொள்ள வேண்டியுள்ளது.
- இனிமேல் புலிகளுக்கு அழுத்தம் கொடுக்கும் வேலையை உலகம் தொடங்கிவிட்டது.


- புலிகள் மேல் தாங்கள் அழுத்தம் கொடுக்கப் போகிறோம் என்பதை மெளனம் காத்ததன் மூலமும் பேசாதிருந்ததன் மூலம் தெளிவுபடுத்தியிருக்கிறார்கள்.

அதேவேளை
சம்பூர் படுகொலைகளைத் தாங்கள் கவனிக்காமல் இல்லை என்பதற்காக அறிக்கையையும் வெளியிட்டுள்ளனர்.
தொடக்கத்தில் ஒடுக்கப்படுகிற மக்கள் மீது கருணை காட்டாமல் ஒடுக்குகிற அரசுக்கு ஆதரவாகச் செயற்பட்டு ஒடுக்கப்பட்ட மக்களுக்குப் போராடுகிற இயக்கத்தை ஒருதரப்புக்குக் கண்டனம் செய்தது. இப்போது இருதரப்புக்கும் கண்டனம் செய்ய முனைந்துள்ளது.


ஒடுக்குகிற அணியையும் ஒடுக்கப்படுகிற அணியையும் ஒரே தட்டில் தராசில் வைத்து கண்டனம் செய்வது நம்ப முடியாத ஒரு செய்தியாக உள்ளது.

எது சரி? எது தவறு என்பதை உலகத்தால் கணிக்க முடியாது இருப்பது கூட எங்களுக்குக் கிடைத்த வெற்றியாக நாங்கள் பார்க்கிறோம்.
ஆக, விரைவில் உலகம் ஒரு முடிவை எடுக்க வேண்டும். ஒருதரப்பை உலகம் கண்டனம் செய்ய வேண்டும். அது எந்தத் தரப்பு என்பது காலம் சொல்லப் போகிற பதிலாக இருக்கும். அதற்காகத்தான் நாங்கள் நீண்ட மெளனத்தை காத்துக் கொண்டு வருகிறோம்.
இன்னொரு ஒரு முக்கிய செய்தியை இந்த இராணுவ நடவடிக்கை மூலம் எங்கள் மக்களுக்கு மகிந்தர் சொல்லியிருக்கிறார்.
மக்களுக்கும் போராளிகளுக்கும் இடையில் எதுவித வேறுபாட்டையும் இனி காணப்போவதில்லை என்பதை மகிந்தர் விளக்கியுள்ளார்.
அதாவது மக்கள் ஒரு நிலையில் போராளியாக மாற வேண்டும் என்பதுதான் மகிந்தரின் செய்தி. அப்படியானால் மக்கள் எப்போது போராளியாவார்கள்? மகிந்தர் தான் நினைக்கிற போதுதான் நடக்கும். ஆக மக்கள் ஒரு புதிய பரிமாணத்துக்குப் போக வேண்டிய நிலைக்குத் தள்ளப்படுகிறார்கள். மக்கள் தங்களைத் தற்காத்துக் கொள்ள போராளியாக மாற வேண்டிய காலம் இது.
மக்கள் போராளிகளாக மாறி- மக்கள் படைகளைக் கட்டி- மக்கள் சேனைகளை உருவாக்கி- யுத்தம் நடத்தி வென்ற வரலாறு வியட்நாமில் நடந்திருக்கிறது.
வியட்நாம் பற்றி ஏற்கனவே நாம் பேசியிருந்தாலும் இப்போதும் சில கருத்துக்களை முன்வைக்கிறோம்.


வியட்நாமின் பழமொழி அல்லது புதுமொழியாக முன்னர் நாம் குறிப்பிட்டிருந்தோம்

போரிடுங்கள் பேசுங்கள்

பேசுங்கள் போரிடுங்கள்

என்கிற மொழிக்கு ஊடாக வியட்நாமின் வரலாறு நடந்த விதமும் வெகுநுணுக்கமாகவும் இறுக்கமாகவும் இராணுவஇ இராஜதந்திர அரசியல் வழிமுறைகளை ஒன்றிணைத்த மூலோபாயத்தை சுமார் 10ஆண்டுகாலம் கடைபிடித்தனர்.

குறிப்பாக 1965 ஆண்டு முதல் 1973 ஆம் ஆண்டுக்கு இடையில் இந்த உத்திகளைக் கடைபிடித்து
"விடுதலை ஒரு நாளில் வருவதில்லை- ஆனால் நீண்ட நாட்களுக்குப் பின் அது ஒருநாள் வரும்" என்ற செய்தியை
1973 ஆம் ஆண்டு ஒப்பந்தம் மற்றும் 1975 ஆம் ஆண்டு படையெடுப்போடு வியட்நாம் நிரூபித்தது.


10 வருடகாலமாக பேச்சும் போருமாக கழிந்த வரலாறு இன்றைக்கு தமிழீழப் போராட்ட வரலாற்றிலும் உருவாகிறது.
இனிமேல் பேச்சோடு போருமாக போரோடு பேச்சுமாக நடக்கப் போகிறது என்பதை நாங்கள் முன்கூட்டியே அறிவிக்கிறோம்.
இறுதியில் வியட்நாம் இராணுவ வழிமூலம் தனது வெற்றியைப் பெற்றுக் கொண்டது என்பதையும் நான் இங்கே மனதில் கொள்ள வேண்டும்.
போரின் காரணமாக மிக உச்சகட்டமான இழப்பைச் சந்தித்தது நாடு வியட்நாம். உதாரணமாக 1965 ஆம் ஆண்டுக்கும் 1973 ஆம் ஆண்டுக்கும் இடையில் 14 மில்லியன் தொன் பீரங்கிக் குண்டுகள், வான்வழிக் குண்டுகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. இது இரண்டாம் உலகப் போரில் பாவித்ததைவிட 3 மடங்கு அதிகமாகும்.


இதேபோல் அண்மையில் எங்கள் சம்பூரில ஒரு குறிப்பிட்ட தொகையான தொன் வெடிபொருட்கள் எங்கள் மக்கள் மீது கொட்டப்பட்டுள்ளது.
வியட்நாமிய மக்களின் மரபு ஒன்றை நாம் நினைவில் கொள்வோம்.
வியட்நாமிய வரலாற்றில் அம்மக்கள் மூன்று விடயங்களை முக்கியமாகக் கொள்கிறார்கள்.


வீடு, நிலம் மற்றும் இறந்தவர்களது நினைவிடங்கள் ஆகியவற்றில் எதிரியானவன் எந்த வகையிலும் உள்நுழைய அனுமதிக்கக் கூடாது என்பது அவர்களது திடமான முடிவு.

"வீட்டில் வாழும்போது உயிரோடு வாழ வேண்டும்- உயிரற்ற நிலையில் நினைவிடங்களில் வாழ வேண்டும்" என்பதை புனிதமாகக் கொண்டு இவற்றில் ஒரு வகையிலும் ஆக்கிரமிப்பாளன் கால் வைக்க விடக்கூடாது என்கிற அடிப்படையில் வியட்நாமிய மக்களின் போர் மரபு உருவானது.
அதேவகையில் உலக மக்களின் அனுபவங்களிலிருந்தும் தனக்கு வேண்டியதை வியட்நாம் கற்றுக் கொண்டுள்ளது.


ஜெனரல் ஜியாப் என்பவர் வியட்நாமின் முக்கிய தளபதி. மக்கள் சேனைகளைக் கட்டிய அனுபவம் உள்ளவர். அவரது நூல் ஒன்றின் கருத்துகளை முன்வைக்கிறோம்.

புரட்சிகர மக்களை ஆயுதபாணிகளாக்குதலும் மக்கள் படையும் என்று 1960களில் மார்க்சீச சிந்தனைகளின் அடிப்படையில் வர்க்கப் போராட்டத்தின் அடிப்படையில் சொல்லப்பட்டவைகளை எங்களுக்குப் பொருத்தமானவற்றை தெரிவு செய்து எங்கள் மக்கள் மனதில் கொள்வதற்காக சிலவற்றை தருகிறோம்.

"ஆயுதமேந்திய எழுச்சியிலும் புரட்சிகரப் போரிலும் அதேபோல் மக்கள் அனைவரும் பங்கு கொள்ளும் தேசியப் பாதுகாப்பிலும் தேசிய விடுதலைப் போரிலும் அதுபோல் தாய்நாட்டைப் பாதுகாக்கும் போரிலும் வலிமை மிக்க ஒரு மக்கள் சேனையைக் கட்டும்போதே பரந்துபட்ட மக்கள் திரளினையும் ஆயுதபாணிகளாக்க வேண்டும். மக்களின ஆயுதப்படைகளை மக்கள் சேனைகளின் அத்திவாரமாகக் கருத வேண்டும். மக்கள் சேனையை மக்கள் படையின் கூறாகக் கருத வேண்டும்" என்கிறார்.

இங்கே அவர் மக்கள் சேனை என்பதை நிரந்தர இராணுவத்தையும்
மக்களின் ஆயுதப் படை என்பதை மக்கள் பங்குபற்றக் கூடியதையும் கருத்தில் கொண்டு தெரிவித்துள்ளார்.
இத்தகைய முடிவுகளை எடுத்து வியட்நாமின் வரலாறு மாற்றியமைக்கப்பட்டது.


வியட்நாமின் மக்கள் சேனை எவ்வாறு உருவாக்கப்பட்டது? என்பதைச் சொல்லுகிறோம்.

வியட்நாமின் மக்கள் படை என்பது- தற்காப்புப் படைகளும் குடிப்படைகளும் கொரில்லா படைகளுமாக வளர்ச்சியடைந்து இறுதியில் மக்களின் ஆயுதப் படைகள் மூன்று வகைகளாகப் பிரிக்கப்பட்டன.

முதலாவது பிரதான படை என்று சொல்லக் கூடிய நிரந்தரப் படை
இரண்டாவது பிரதேச படை என்பது பிரதேசங்களைக் காப்பதற்கான படை
மூன்றாவது குடிப்படை என்று சொல்லக் கூடிய மக்கள் அனைவரும் பங்குபற்றக் கூடிய ஒரு படையணியாக உருவாக்கப்பட்டது.
இதில் இராணுவ ரீதியாக நிரந்தரப் படை அணி என்பது மிக முக்கியமானது. நாடு முழுவதும் முக்கியப் போர் முனைகளில் பயன்படுத்தப்பட்ட இயங்கு படை இதுதான். எதிரியின் சேனையை குறிப்பாக இராணுவ முக்கியத்துவம் வாய்ந்த இயங்கு படையை நிர்மூலமாக்குதல் போன்ற பல்வேறு செயற்பாடுகளை இந்தப் படை மேற்கொண்டது.


ஒவ்வொரு போர் முனைகளிலிருந்தும் ஒவ்வொரு திட்டவட்டமான நிலைமைகள்- கடமைகள் ஆகியவற்றுக்கு ஏற்ப பிரதேச படைகள் கட்டப்பட்டன.

இதை ஜியாப் அவர்களின் வார்த்தைகளில் கூறினால்,
"பிரதேசங்களில் நடத்தப்படும் ஆயுதப் போராட்டத்தின் அடிப்படையாக அவை அமைகின்றன. வலுவான படை அலகுகளாக ஒழுங்கமைக்கப்பட்ட பிரதேச படைகள் போர் நடவடிக்கைகளில் தமது படைகளைத் தேவைக்கு ஏற்ப தேவையான இடங்களில் ஒன்று குவித்தும் பரவலாக்கியும்...." என்று அந்த வரிகள் செல்கின்றன.
குடிப்படைகள் என்று சொல்லப்படுகிற மக்களினது ஆயுதப் படைகள் குறித்தும் மிக விரிவாக ஜியாப் அவர்கள் கூறியுள்ளார்.
இன்று எங்கள் நிலையில் போராளிகளாக மக்கள் மாற வேண்டுமாயின்
மக்களை ஆயுதமயமாக்குதல்- சேனைகளில் இணைத்தல் என்ற அடிப்படையில் செயற்பட வேண்டிய காலகட்டத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறோம். இந்த நிலையில் வியட்நாமின் அனுபவங்கள் எங்களுக்குப் பயன்படும்.


தமிழீழ மக்கள்- வியட்நாமிய மக்களினது சாதனைகளைப் பற்றி அறிவதும் முக்கியமானது.
அந்த வகையிலும் ஜியாப்பின் கருத்துகளைத் தொடர்ந்து வாசிக்கிறேன்.
"போரில் குடிப்படைகளும் தற்காப்புப் படைகளும் ஒரு பெரும் பாத்திரத்தை வகித்தன."
இந்தத் தற்காப்புப் படைகளும் குடிப்படைகளும்தான் தற்போது நாங்கள் அமைக்க விரும்புகிற மக்கள் படையணியின் வியட்நாம் மரபாக இருக்கிறது.


"கலப்பை ஒரு கையிலும் ரைபிள் ஒரு கையிலும்

சுத்தியல் ஒரு கையிலும் துப்பாக்கி ஒரு கையிலும்

என்ற இயக்கங்களில் இளைஞர்களும் முதியவர்களும் ஆடவரும் பெண்டிரும் கிராமங்களிலும் நகரங்களிலும் சமவெளிப்பகுதிகளிலும் மலைகளிலும் எதிரி விமானங்களைச் சுட்டு வீழ்த்துவதிலும் செயல்நுட்பத்துடன் பங்குபற்றினர். அவர்கள் தாழ்வாகப் பறக்கும் விமானங்களைச் சுட்டு வீழ்த்தும் துப்பாக்கிகளை கிராமப்புறங்களில் ஆங்காங்கே ஒன்றுக்கொன்று தொடர்புள்ள வலைப்பின்னல் போல் அமைத்தனர்.

குடிமக்களையும் உற்பத்தியையும் பாதுகாத்து எல்லா உயரங்களிலும் எல்லா திசைகளிலும் பறக்கின்ற எதிரியினது விமானங்களைச் சுட்டு வீழ்த்தும் துப்பாக்கிகள் அடங்கிய பின்னலமைப்பை உருவாக்குவதில் விமான எதிர்ப்புப் படையுடனும் விமானப் படையுடனும் நெருக்கமாக ஒத்துழைத்தனர்."
இவ்வாறாக விரிந்து செல்லும் வசனங்களுக்கூடாக இங்கே நாம் அறிய வேண்டியது-


தற்போது இரண்டு கைகள் உள்ள எங்கள் மக்கள்-

ஒரு கையில் தொழிலுக்கான கருவிகளையும்

மறு கையில் ஆயுதத்தையும் ஏந்த வேண்டிய காலம் வந்துவிட்டது
வியட்நாம் மக்களினது சாதனைகளை வாசித்தால் இன்றைக்கு நம்ப முடியாததாக இருக்கக் கூடும். இருந்தபோதும் சமாதான காலத்திற்கூடாக உருவாக்கப்பட்ட படை அரசியல் படை என்று சொல்லப்பட்டது.
அந்த அரசியல் படையை சமாதான காலத்திலிருந்து போர்க்காலத்திற்குத் தள்ளப்பட்ட போது-
எங்கள் தமிழீழம் போல்
தற்காப்புப் படை நிலையிலிருந்து போரிடும் படையாக மாற்றிய வளர்ச்சியையும் நாங்கள் பார்க்கிறோம்.
தமிழீழத்தில் நீண்டகாலமாக போர் மரபு இருந்தது. இடையில் மறக்கப்பட்டுவிட்டது. ஆனால் வியட்நாமில் பல நூற்றாண்டுகாலமாக சீனாவுக்கு எதிராக- ஜப்பானுக்கு எதிராக- பிரான்சுக்கு எதிராக- அமெரிக்காவுக்கு எதிராக என்ற போர்ப் படையணி மரபு இங்கு இல்லாவிட்டாலும் கூட வியட்நாமிய அனுபவங்களை இங்கே நாம் பயன்படுத்திக் கொள்ளக் கூடியதாக இருக்கிறது.
நாங்கள் வியட்நாம் அனுபவத்திற்கூடாக -
விடுதலை வலயங்கள் அல்லது புரட்சிகரத் தளங்கள் அமைக்கப்பட்டது போல்
இன்று தமிழீழத்தில்
வன்னி என்பது விடுதலை வலயமாக- புரட்சித் தளமாக- மையமாக இருப்பதால் எங்கள் மக்கள் இக்கருத்துகளை உள்வாங்கிக் கொள்ள வேண்டும்.
ஜியாப் சொன்னது போல் அவர் புரட்சி என்கிறார்.. நாம் விடுதலை என்று சொல்லலாம்.


"விடுதலையின் அனைத்துக் கடமைகளிலும் மக்களே அதற்குத் திடமான அடிப்படையாக அமைகிறார்கள் என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. மக்களின் அரசியல் படைகளே ஆயுதப் படைகளின் திடமான தளமாகும். மக்களின் ஆயுதப் படைகளே புரட்சி சேனையின் திடமான அடிப்படைத் தளமாகும்." என்கிற செய்திக்கூடாக நாம் இங்கே ஒரு கட்டுமானத்தைக் கட்ட வேண்டியது அவசியமாகிறது.

ஏற்கனவே எங்கள் விடுதலை அணியில் நிரந்தரப் படை அணியும் அதற்கு துணையான அணியும் கட்டப்பட்டுள்ளது.

இப்போது மூன்றாம் படையணி ஒன்றை அற்புதமாக- நேர்த்தியாக கட்ட வேண்டிய நிலையில் உள்ளோம்.

அந்த வகையில் மக்களை போர் உத்திகளுக்கூடாக போரணியாக்கி போர் உத்திகளை மக்களுக்கும் கற்க வைத்து ஒரு மகத்தான அரசியல் படையையும் வலிமை மிக்க ஆயுதப் படையையும் ஒன்றிணைக்க வேண்டிய கால கட்டத்தில் நாங்கள் வாழ்கிறோம்.

இதைத்தான் மகிந்தரின் இராணுவ உத்திகளும் குண்டுவீச்சுகளும் சர்வதேச அழுத்தங்களும் உருவாக்கி உள்ளன.
தொடர்ந்து வரக்கூடிய இந்த மிகப்பெரும் நெருக்கடிகளுக்கு முகம் கொடுக்கிற மிகப் பெரிய கவசமாக- அற்புதமான ஒரு படையாற்றலாக- மக்கள் படையணியை எங்கள் தேசத்திற்கேற்ற வகையில் உருவாக்கும் செயற்பாடுகளுக்கு நாங்கள் ஆயத்தமாக வேண்டும் என்றார் க.வே.பாலகுமாரன்.


நன்றிகள்: புதினம்

இதைத் தான் தியாகி திலீபனும் சொன்னான். "மக்கள் புரட்சி வெடிக்கட்டும். சுதந்திர தமிழீழம் மலரட்டும் என்று" எதிரிகளும் துரோகிளும் வெல்லப்படும் அந்த நாளில் தமிழீழ தேசியக் கொடி சுதந்திரக் காற்றில் வீராப்புடன் ஆடும்.

Saturday, April 29, 2006

இதற்காகத் தான் எல்லாமே!!

பெயரளவில் ஜனநாயகம் பிதற்றி
பெருமகனாய் அலங்கரித்து
சீர் கெட்டு சிங்களவனுக் அடிவருடி
சதை வளர்க்கும் செய்த கூட்டம்
செய்த தப்பால் தான்!!

தேசிய விடுதலை என்று தேடிய கூட்டமதில்
பாசிய துரோகத்தனம் பல்லாயிரம்
தமிழரை விலை பேசி
நீச படைகளைக் கொண்டு எம்
நிம்மதியை தொலைத்தால் தான்!!!

கட்டிய கோவணத்தையும் களவெடுத்து
சிங்களவனுக்கு செம்மல் பட்டம் கொடுத்து
தன் வாழ்விற்காய் தன் இனத்தை
துச்சமென்று காட்டி விலை பேசி
எச்சமின்றியே அழிக்க உதவிய
பாசியத் துரோகிகள் செய்த கபடத்தால் வந்த வினை!!

பெற்றவளையும் உற்றவளையும் பேரினவாதம்
சத்தமின்றி இச்சை தீர்த்து சாய்த்த போது
அந்தச் சா கேட்க நா எங்கு போனது?
கயவர்களின் காசு உன் கண்ணை மறைத்ததுவா?

பெண்கள் பெண்மை இழக்க,
போரில் அது சகஜம் என்று மூடி மறைத்த
துரோகக் கும்பலில் நீயும் ஒருத்தன் தானோ?

மரணத்தால் நாம் மகிழ்கின்றோம்!!
சிங்களவனுக்கு அடிவருடி சீர் கெட்டு நிற்கும்
உன் பெற்றவள் போலின்றி
மறைந்தாலும் மண்ணக்காக என்றபடி மறைந்தவள்
பெரும் வாழ்வுநிச்சயம் உலகம் சேவிக்கும்!!

வேங்கையவன்: புலித்தலைவன்

அல்லும் பகலும் ஆர்தெழும் உணர்வு மேவ
செல்லும் கிபிர் உம் கொண்டிங்கே
மெல்லவும் தமிழினத்தை சிதைத்து சீரழித்து
வல்லூறுக்கு விருந்தளித்ததே சிங்களத்து பேரினவாதம்.

பெண்டீர், குழந்தைகள் பெரியவர் என்று பாராமல்
கண்டபோதெல்லாம் கழுத்தை நெரித்து,
கயவர் கூட்டம் கரைத்ததே இரத்த வெறி!!

தாய்மைப் பெருந் தாலாட்டு குரல்வளை தெறித்தொ துங்கும்
கருவில் குண்டடி, காலில் மிதிவெடி-
காணுமி டமெல்லாம் மனிதத் துண்டம்!
சொன்னால் செய்வதற் கொரு சிங்களத்து சாவுக் கூட்டம்,
சகதியாய் குருதிச் சேற்றில் மக்கள் கூட்டம்


இதைப் பார்கொள்ளாது, பருதவிக்கும்
நாயகர் கூட்டம் துப்பாக்கி தூக்கி,
பேயவர் சிங்களத்தை பெருமோலமிடவைத்து- ஈழத்து
சேயவர்களுக்கு நிழல் அளிப்பார்!!


போர் வினை செய்யப் பெற்ற நாட்டில்
கண்கொடு ஜனநாயகத்தின் பெயரால்
பழி கொண்ட சிங்களக் காட்டேரிகளின்
படியளந்து சிலர் பழந்தமிழரை விலை பேசிடுவார்!!


செத்தது தமிழனாய் இருந்தால் செம்மையுடன்
சிங்களத்தை வாக்காளத்து வழங்கிடுவார்.
பெற்றது பெருமினமாய் போனதால்
சொறியுதோடா செஞ்சோற்று!

இந்தியாவிலும் வாங்கி இலங்கையிடமும் வாங்கி
ஈழம் எமக்கெதற்கு என்று உதறியது போல்,
திலகமாம் தேசியத்தலைவன் சிறுமைப் பட்டுப் போகதால்
உள்ளம் கொதிக்குதோ- சிங்களத்தப்பனின் விந்துயிர்ப்பு!!!

தினமும் அறிக்கையாக்கி தேசத்தில் விட்டிருந்தால்
தெளிவான தமிழீழம் கிடைத்திடும் என்று
தெருநாய்களாய்ப் புலம்பி நின்று முட்டாள்களுக்கு
தேசியத்தலைவன் வழி- இப்பழம் புளிக்குதாம்.


சிங்களத்து நாய்களது சிறுநீர் நக்காமல்
வெங்களததில் விடுதலைக்கு உழைத்தால்
எங்கள் ஈழம் இனிதே கிடைத்திடுமே!
விபச்சாரி மகன்களை ஒதுக்கிடுவோம்!!

Friday, April 28, 2006

என் முதல் வணக்கம்

எச்சல் இலையை நக்கியபடி தாங்களும் ஜனநாயகம் கதைக்கின்றோம் என்று புலம்பித்திரியும் கூட்டத்தை அடையாளப்படுத்த வேண்டிய தேவை உள்ளது.
எனவே இப்படிப்பட்ட ஜனநாயகவாதிகளின் ஜனநாயகம் எப்படிப்பட்டது என்பதையும், இவர்கள் சிங்கள அரசுடன் எப்படி நெருக்கமாக இருந்தபடி சிங்கள அரசு செய்யும் தமிழர் கொலைகளை நியாயப்படுத்த வேண்டிய தேவை எமக்குண்டு.

சிலர் தமிழ்மணத்தில் ஈழப் போராட்டம் தொடர்பாக தப்பாக எழுதுவதன் மூலம் அதை சிறுமைப்படுத்தப் பார்க்கின்றனர். இவர்களைப் போன்றவர்களுக்கு விடுதலைப் போராட்டம் என்பது வெறுமனே அறிக்கைகளாலும், குளிரூட்டப்பட்ட அறையில் விவாதிப்பதுமல்ல என்பதைப் புரிய வைப்பது தான் எம் எண்ணங்கள்.

படித்தவர்கள் தான் சாதிப்பார்கள் என்று சொல்லி, சிங்களப் பேரினவாதம் தந்த எச்சல் எலும்பிற்காய் இனத்தையையே விலை பேசிய கூட்டத்தை ஒதுக்கி, தமிழர்கள் யார் என்று தனித்தே அடையாளம் காட்டிய தலைவன் வழியால் இவர்கள் விழி பிதுங்கி நிற்கின்றது

"தன் மகனுக்கு "அட்மிசனுக்காக" இவர் என் வாசலில் தவம் இருந்தவர் என்று டட்லி சேனாநயக்கா சொன்னபோது வாய் மூடி மௌனமாக இருந்த இந்தப் படித்தவர்கள் செய்த அநியாயம் கொஞ்ச நஞ்சமல்ல. இன்று வரைக்கும் தமிழனுக்கு விடிவு வராமைக்கு இவர்கள் சிங்கள இனவாதிகளுடன் சேர்ந்து செய்யும் துரோகத்துக்கும் பங்குண்டு.

தங்களை ஜனநாயக வாதிகளாகவும், நியாயவாதிகளாகவும் காட்டிக் கொண்டு ஈழத்தில் சிங்கள இராணுவம் செய்யும் கொலைகள், பாலியல் வல்லுறவுகளை மூடி மறைப்பதும், அவற்றை புலிகள் மீது பழி போடுவதும் தான் இவர்கள் வேலை

ஒரு ரஜனி திரணகமவின் மரணத்துக்காக புலம்பும் இவர்கள் ஏன் இத்தனை அட்டூழியங்களையும் ஏன் கண்டு கொள்ளவில்லை. அது சேவகத் தொழில் செய்யும் மாயை!!

ஜனநாயகம் என்று பெயர் போட்டால் மட்டும் போதாது, சனநாயகம் எப்படிப்பட்டது என்பதை தெளிவாக புரிய வைப்போம்!!


தாயகத்தில் உள்ள எதிரிகளையும், துரோகிகளையும் தலைவன் பார்த்துக் கொள்வான். புலத்தில் உள்ள துரோகிகளை நாம் பார்த்துக் கொள்ளப் போகின்றோம்.

இப் பதிவுக்கு வரும் உறவுகட்கு நன்றிகள்